உள்ளூர் செய்திகள்

 கடையில் கருகி போன துணிகள்.

டீ கடையில் தீ விபத்து

Published On 2022-08-10 09:04 GMT   |   Update On 2022-08-10 09:04 GMT
  • 5 பேர் காயம்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58) இவர் தனது வீட்டின் முன்பு சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் டீ கடை திறந்தார்.

இவரது கடைக்கு டீ குடிக்க ராதாகிருஷ்ணன் (55), வேலு (62), மற்றொரு வேலு (42) சேகர் (60 ஆகியோர் டீ குடிக்க வந்தனர். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.

மளமளவென தீ பரவியது. இதில் டீக்கடைக்குள் இருந்த 5 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ராராகிருஷ்ணன், செல்வராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சேகர், சேட்டு, வேலு ஆகியோர் லேசான காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த விஏஓ, சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News