தமிழ்நாடு செய்திகள்
செங்கல்பட்டு: அரசு பேருந்தும் வேனும் மோதி விபத்து- 2 பெண்கள் பலி
- படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் நேருக்க நேர் மோதி விபத்த ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.