தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் காற்றுடன் கூடிய மழை... மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு

Published On 2025-12-01 08:17 IST   |   Update On 2025-12-01 08:17:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
  • தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

சென்னை:

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, பலத்த காற்று வீசுவதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News