ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
- ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது
- 85 பேர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5.50 லட்சம் கல்வி உதவித் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
6 -ம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வளர்ச்சி சங்க தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார்.
அன்னை தெரேசா கிராம வளர்ச்சி இயக்கத் தலைவர் ஐடி தேவாசிர்வா தம் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்தார்.
செல்ப் அறக்கட்டளை முன்னாள் செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், பொருளாளர் கருணாகரன், செல்ப் அறக்கட்டளை தன்னார்வ லர்கள் எஸ். இமையவன், செல்வராஜ். கலைச் செல்வன், சுந் தரம், முருகேசன், கனிமொழி, சரத்பாபு, கார்த்தி, தமிழ் முகி லன், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரக்கோ ணம் நகராட்சி ஆணையாளர் ஆர்.லதா, மாவட்ட கல்வி அதி காரி ஹேமலதா, ராணிப் பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, அறம் கல்விச் சங்கத் தலைவர் முனைவர் கலை நேசன், தலைமையாசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம், ஹானா பாண்டியன், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், கொரோனா நல் லடக்க குழு தலைவர் முகமது அலி, சந்தர், அம்பேத் ஆனந் தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 85 மாணவர்களிடமும் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசியதாவது,
மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அரசு பணிக்கு சென்று தன் குடும்பத்தை மேம்படுத்த முன் வர வேண்டும்.
அதுபோல் படிப்பை முடித்தவர்கள் கிராமபுற ஏழை மாண வர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும், மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் ஒழுக்கத்துடன் தன்னடக் கத்துடன் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண் டும் என்று ஊக்கப்படுத்தி பேசினர்.
இறுதியாக கல்வி உத வித் தொகை வழங்கிய நன்கொடையாளர்கள் சங்கீதா ராஜேஷ், டாக்டர் ஆனந்த் விஜயலட்சுமி, டாக்டர் ஜெயராஜ் சுபா, நவீனா பாபு, டாக்டர் மோகன் குமார், காயத்ரி கவிதா, சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ப் அறக்கட்டளை சார்பில் பௌத்த அரசி நன்றி கூறினார்.