உள்ளூர் செய்திகள்

400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-05 09:29 GMT   |   Update On 2022-09-05 09:29 GMT
  • ரெயில்வே போலீசாருக்கு தகவல்
  • வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு

நெமிலி:

பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரெயில் நிலையம் - அருகே சென்னை - மைசூரு செல்லும் ரெயிலில் கடத்துவ தற்காக முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் ஹேமந்தகுமார், ஏட்டு சுப்பிரமணி, போலீஸ் காரர் வீரேஷ்குமார் ஆகி யோர் சென்று 8 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை பாணாவரம் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News