உள்ளூர் செய்திகள்

பைக்கில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2023-05-04 08:14 GMT   |   Update On 2023-05-04 08:14 GMT
  • 1½ கிலோ பறிமுதல்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீசார் மங்கம்மாபேட்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்ன ர் அவர்களின் சோதனை செய்தபோது 1½ கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.

விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 34), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜசேகர் (32), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கண்ணவேணி மகேஷ் (27 ) என்பது தெரிய வந்தது.

வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News