பெண் உட்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
- கொலை வழக்கில் நடவடிக்கை
அரக்கோணம்:
கடந்த மே மாதம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் உள்ள காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியான மாணிக்கம் ராணி ஆகியோர் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில்அரக்கோணம் கிராமிய போலீசார் திருத்தணியை சேர்ந்த தரணி (25) சந்திரன்(40) உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இதில் முக்கிய முக்கிய காரணமாக இருந்த தரணி மற்றும் சந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் இதேபோல் அரக்கோணம் தோல் ஷாப் பகுதியில் பச்சிளம் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் நகர போலீசார் தேன்மொழி உட்பட இருவரை கைது செய்தனர்.
இதில் தேன்மொழியை (51) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.