உள்ளூர் செய்திகள்

அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.44 கோடி நலத்திட்ட உதவி

Published On 2023-04-30 12:29 IST   |   Update On 2023-04-30 12:29:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ராணிப்பேட்டை விஷ்வாஸ் பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக், வடிவேலு, நிர்மலா செளந்தர், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன்,தேவி பென்ஸ் பாண்டியன், அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News