உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே துத்திப் பட்டு ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த காட்சி.

ஆம்பூர், வாணியம்பாடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

Published On 2023-04-22 13:21 IST   |   Update On 2023-04-22 13:21:00 IST
  • மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர்
  • மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் மஜ்ருலூம் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆயிரம் பேரும் துத்தி பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 20 ஆயிரம் பேரும் மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர். பேர் பெரியாங்குப்பம் மின்னூர் சோலூர் மாதனூர் அருங்கல்துருகம் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், கண்ண மங்கலம், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags:    

Similar News