உள்ளூர் செய்திகள்

சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்

Published On 2023-03-26 08:59 GMT   |   Update On 2023-03-26 08:59 GMT
  • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News