மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி
- சாயல்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் வில்வபிரதாப் (22). இவர் நேற்று இரவு சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது பைக்கும், சாயல்குடியில் இருந்து மலட்டாறு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாயழகு மகன் முனீஸ்வரன் (28)ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சாயல்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் இருவரையும் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வில்வ பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.