உள்ளூர் செய்திகள்

கார் மோதி வாலிபர் பலி

Published On 2023-02-05 08:18 GMT   |   Update On 2023-02-05 08:18 GMT
  • ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
  • காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). இவர்களுக்கு திவாகர் (20) என்ற மகன் உள்ளார்.

சம்பவத்தன்று திவாகருடன் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பினர். ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகிலுள்ள குவார்ட்டர்ஸ் அருகில் வாகனத்தை நிறுத்தி தமிழ்செல்வியும், திவாகரும் ஆறுமுகத்தின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் திவாகர் ஆகியோர் மீது மோதியது. இதில் திவாகருக்கு தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திவாகரை மீட்டு ராமநா தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News