உள்ளூர் செய்திகள்

தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

Published On 2023-08-06 05:25 GMT   |   Update On 2023-08-06 05:25 GMT
  • தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.
  • முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் இப்ராகிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக்சாகிப், துணைத்தலைவர் யாசர்அரபாத், துணை செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்தீக் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலர் அன்சாரி, மாநில பொதுச்செயலர் அப்துல் கரீம் பேசினர்.

தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் வாசித்தார். இதில் மணிப்பூர் கலவரத்தில் பாதித்தோருக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொது சிவில் சட்ட முன்னெடுப்பை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News