உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கல்
- பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கப்பட்டது.
- ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
கீழக்கரை
கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகள் 32 பேருக்கு சீருடையும், மாணவ, மாணவிகள் 500 பேருக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சியும் தாளாளர் அப்துல் மத்தீன் தலைமையில் நடந்தது.
ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் ரமீஸ், அஜ்ஹர், ஆசிரியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பொருளாளர் சிவகார்த்திக், மருத்துவர் செய்யது ராசிக்தீன், தர்மராஜ், சுந்தரம், சபிர், செய்யது மிதாஹிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.