உள்ளூர் செய்திகள்

தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மறுவாழ்வு சங்கம் சார்பில் தலைவர் செல்லத்துரை தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்

Published On 2023-08-24 08:07 GMT   |   Update On 2023-08-24 08:07 GMT
  • தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்.
  • சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மறுவாழ்வு சங்க தலைவர் செல்லதுரை கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதியில் 1964 புயலுக்கு முன் ஆயிரக்க ணக்கான மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர்.

புயலுக்கு பின்னர் முகுந்தராயர் சந்திரம் பகுதியில் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வந்ததாகவும், அதே பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து கடைகள் ஏற்படுத்தி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு தேவையான பொருட்கள், உணவுகளை விற்பனை செய்து வந்தனர்.

தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் மீனவர்கள் மட்டுமே அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது சில நபர்கள் அத்துமீறி கடை அமைத்து சட்டவிரோமாக புகையிலை, மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதால் பாரம்பரியமான மீனவர்களால் அமைக்கப் பட்டுள்ள கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டுள் ளது.

இதனால் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு கொடுத்தபோது நிர்வாகிகள் நம்புக்குமார், உமையேசுவரன், சக்திவேல், உமாரவி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News