உள்ளூர் செய்திகள்

சோமவார பிரதோஷ வழிபாடு

Published On 2023-08-29 07:36 GMT   |   Update On 2023-08-29 07:36 GMT
  • ராமநாதபுரம் அருகே சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.
  • திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது அன்னபூர னேசுவரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில். வாலி வழிபட்ட தலம் என கூறப்படுகிறது.

அதற்கு சாட்சியாக சீதையை மீட்கும் முன் ராமபிரான் இவ்வழி யாக இலங்கை செல்லும் போது வழிபட்ட வெயிலுக்குகந்த விநாயகர் கோயில் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூர உள்ள உப்பூரில் உள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தட்சி ணாமுர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்க ளுக்கும் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விரதமிருந்த பெண்கள் கோவிலைச்சுற்றி வந்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அபிஷேக பால் மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

இதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், சுந்தர பாண்டிய பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News