உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணி

Published On 2023-04-23 08:59 GMT   |   Update On 2023-04-23 08:59 GMT
  • ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது.
  • மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதேபோல் மற்ற பள்ளிகளிலும் இந்த மாணவ-மாணவிகளை போல் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளிச் செயலாளர் ஜீவலதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News