உள்ளூர் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரவு நேர ஆய்வுகள், காணொளி ஆய்வுகளை நிறுத்த வேண்டும். 25 ஊராட்சிகளை கொண்டதாக ஊராட்சி ஒன்றியங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பெரும்பாலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது, அடுத்த கட்டமாக டிசம்பர் 14ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.