- ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
கீழக்கரை
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான ம.தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினர்.
முன்னதாக அரண்மனை கோட்டை வாசல், விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துவேல், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மேகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், போகலூர் வட்டார தலைவர் முனீஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தமிழரசன், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொன்.பெரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.