உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

Published On 2022-11-24 06:09 GMT   |   Update On 2022-11-24 06:09 GMT
  • முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
  • நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News