உள்ளூர் செய்திகள்

வக்பு விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜமாத் தலைவரை மாற்ற கோரி மனு

Published On 2023-05-09 13:25 IST   |   Update On 2023-05-09 13:25:00 IST
  • வக்பு விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜமாத் தலைவரை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
  • 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஜமாத்திற்கு தேர்தல் நடத்தி 9 வருடங்கள் ஆகியும், தற்போது வரை எந்தவித வரவு-செலவு அறிக்கையும் பள்ளிவாசலில் ஒப்படைக்கவில்லை. இதுவரை பல லட்ச ரூபாய் வசூல் செய்து ஜமாத் தலைவர் தன்னிச்சையாக வைத்துள்ளார். அது பற்றி வக்பு வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக வக்பு வாரிய தலைவர் தேர்தல் நடத்தி முறையான வரவு-செலவு கணக்கை செயல்படுத்த வேண்டும். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத்தை நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர தேர்தல் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News