உள்ளூர் செய்திகள்

பரமக்குடி வாலிபர் கொலையில் நண்பர்களை பிடித்து விசாரணை

Published On 2022-12-22 08:03 GMT   |   Update On 2022-12-22 08:03 GMT
  • பரமக்குடி வாலிபர் கொலையில் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பரமக்குடி

சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜரான கண்ணன் நேற்று காலை பரமக்குடி எமனேஸ்வரம் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணனுக்கும், இளையான்குடி அருகே உள்ள ராதாபுளி கிராமத்தை சேர்ந்த விஜயராஜ், தர்மகர்த்தா ஆகியோருக்கும் நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேரும் கண்ணனை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜயராஜ், தர்மகர்த்தா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News