பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு
- பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்ப தற்காக 8300175888 என்ற தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் இந்த தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தினார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 83001 75888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதார ருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 1098, பேரிடர் மேலாண்மை சார்பில் 1077, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 181, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.