உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் ரோட்டரி சங்க தலைவர் கபிர் தலைமையில் நடைபெற்றது.

தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-09-01 07:40 GMT   |   Update On 2023-09-01 07:40 GMT
  • தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
  • இம்முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ரோட்டரி சங்கம் ராமநாதபுரம் சுகாதாரப்பி–ரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் ரோட்டரி சங்க தலைவர் கபிர் தலைமையில் நடை–பெற்றது.

செயலாளர் எபன் வர வேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடு வதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக் கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் பேசினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக் தீன் தலைமை உரையாற்றி னார்.

கருத்தரங்கின் நோக் கத்தை குழந்தை நல மருத்து வர் அய்சத்துல் நசிதா எடுத்துரைத்தனர். இம்முகா மில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரி யர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட தாய் சேய் நல அலு வலர் ரஹ்மத் நிஷா, மருத்துவர் ராம்பாபு, ரோட் டரி சங்கம் முன்னாள் தலை வர்கள் சுப்பிரமணியன், டாக்டர் சுந்தரம், மற்றும் நூகு, சிவகார்த்திக், சபிக்,

பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் செவிலியர்கள், மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்மு காமில் ஏராளமான மாண வர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

Tags:    

Similar News