உள்ளூர் செய்திகள்

தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர் தொழிலதிபர் சண்முகசுந்தரம் பரிசு வழங்கினார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பார்வையாளர் தேர்வு போட்டி

Published On 2022-06-23 09:18 GMT   |   Update On 2022-06-23 09:18 GMT
  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பார்வையாளர் தேர்வு போட்டி நடந்தது.
  • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 44-வது ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக 15 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் உள்ள விளை யாட்டு அரங்கில் தேர்வுப் போட்டிகள் நடந்தது.

கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் போட்டியினை தொடங்கி வைத்தார். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 40 மாண வர்கள், 60 மாணவிகள் உள்பட மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர் தொழிலதிபர் சண்முகசுந்தரம் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், ராமநாதபுரம் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய், முதன்மை ஆர்பிட்டர் அதுலன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் மாணவர் பிரிவில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் ரக்சன், மாணவிகள் பிரிவில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி மிர்துலா ஆகியோர் முதலி டம் பெற்றனர்.ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வரும் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அகில இந்திய சதுரங்க கழகம், உலக சதுரங்க கழகம் அனுமதியுடன் மாமல்லபுரத்தில் தமிழக அரசின் முழு நிதி உதவி யுடன், ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் 189 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவி மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிடவும், சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

முடிவில் மாவட்ட பொரு ளாளர் குணசேகரன் நன்றி கூறினார். போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் எப்ரேம் செய்திருந்தனர்.

Tags:    

Similar News