உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை விசாரணை

Published On 2023-09-27 07:09 GMT   |   Update On 2023-09-27 07:09 GMT
  • இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
  • ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கிளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இதில், ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கி ளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் காய மடைந்த மீனவர் பிராங்கிளி னிடம் உளவுத்துறை போலீ சார் விசாரணை நடத்தினர். அவரிடம் இந்திய கடல் பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி யதா? அல்லது இலங்கை கடல் பகுதியில் நடை பெற்றதா? என விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News