உள்ளூர் செய்திகள்

ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-11-04 07:51 GMT   |   Update On 2022-11-04 07:51 GMT
  • ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
  • பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் பிச்சை மூப்பன்வலசை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.

இதில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஏர்வாடியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஏர்வாடி பகுதியில் சிறந்த சேவை செய்த மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டுவது, பேரிடர் காலத்தில் விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி செயலாளர ஜெயராம கிருஷ்ணன் நன்றி கூறினர். ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணி செய்வதில் மிகுந்த சிரமத்துடன் செய்து வருகிறோம்.

துப்புரவு பணிக்கு டிராக்டர் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். ஏர்வாடியை பேரூராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பள்ளி அருகில் அமைந்துள்ள மதுக்கடையையும், மனநல காப்பகம் அருகில் அமைந்த மதுக்கடையையும் மூடிவிட்டு நகருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News