உள்ளூர் செய்திகள்

நரேந்திரகுமார்

விபத்தில் அரசு ஊழியர் பலி

Published On 2023-06-10 14:50 IST   |   Update On 2023-06-10 14:50:00 IST
  • திருவாடானை அருகே நடந்த விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
  • மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார்(வயது37). இவர் திருவாடானை பாரதி நகர் பகுதியில் தங்கி, ராமநாதபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் அலுவ லராக பணிபுரிந்து வருகிறார்.

பணி முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கற்காத்த குடி அருகே வந்த போது, ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம டைந்த நரேந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News