உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2023-11-08 07:10 GMT   |   Update On 2023-11-08 07:10 GMT
  • ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
  • தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் ஆட்டு வியாபாரிகள், கசாப்பு கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் அதிகமாக கூடினர். இதே போல் வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. இதனால் சந்தை களை கட்டியது.

வழக்கத்தை விட ஆடுகளின் விலை அதிக மாக உள்ளதாக கசாப்பு கடை வியாபாரிகள் தெரி வித்தனர். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது. இன்று மட்டும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News