உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூரில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிமுக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது

Published On 2023-01-12 09:57 GMT   |   Update On 2023-01-12 09:57 GMT
  • சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது.
  • தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்தங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

முதுகுளத்தூர்

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்தார். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து அவரை ஊர்வ லமாக அழைத்துச் சென்று நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 2024பாராளு மன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தாமரையில் வெற்றிபெறும் வகையில் மாநில தலைவர அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி பாடுபட்டு வருகிறோம்.

தி.மு.க.வின் ஊழலை, அராஜக போக்கை எதிர்த்து பா.ஜ.க. போராடி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. ஆதரவு நிலை என்பது தவிடுபொடியாகிவிட்டது. தி.மு.க. அரசு தொடர்ந்து ஊழலை செய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்லிம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளோம். போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது.

தி.மு.க. அரசு ஆளுநரை இழிவு படுத்த முடிவு செய்து விட்டது. தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்த ங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காவல்துறை மூலம் பா.ஜ.க.வினர் மீது அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு அதிர்ச்சியாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சிவராம கிருஷ்ணன், எம்.சி.ரமேஷ் ராணுவ அணிசெந்தூ 

Tags:    

Similar News