உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல்

Published On 2023-10-31 07:26 GMT   |   Update On 2023-10-31 07:26 GMT
  • தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
  • உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினரு மான காதர் பாட்சா முத்து ராமலிங்கம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்பேரில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை (நவ.1) ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மதியம் 2 மணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப் பிற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கான நேர்காணல் நடக்கிறது. எனது தலைமை யில் (காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்) நடக்கும் இந்த நேர்காணலில் ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்பு களில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தால், அதுதொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News