உள்ளூர் செய்திகள்

குடிநீர் திட்டப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-09-20 07:19 GMT   |   Update On 2023-09-20 07:19 GMT
  • குடிநீர் திட்டப்பணிக்காக பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியானது.

இதனைதொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேசுவரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்ட குடி கார்னர் பகுதியில் சேதமடைந்த காவேரி குழாய் சீரமைப்பு பணிக் காக குழி தோண்டப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. சிமெண்ட் மூலம் சீரமைக் கப்பட்டதால் குறைந்த பட்சம் 12 மணிநேரம் ஆகும்.

குழி தோண்டப்பட்ட இடம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, ராமநாதபுரம், கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கினர். மேலும் அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News