உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மர் எம்.பி. பேசினார்.

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-23 14:33 IST   |   Update On 2023-03-23 14:33:00 IST
  • ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • விரைவில் விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்க ளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தர்மர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை யொட்டி டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்கிவிட்டு பதவியை அபகரிக்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், மீன வர்கள், விவசாயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. விரைவில் விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

Tags:    

Similar News