உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பயனாளிகளுக்கு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உள்ளார்.

வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க கோரிக்கை

Published On 2023-06-22 08:16 GMT   |   Update On 2023-06-22 08:16 GMT
  • வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
  • மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன், சிவக்குமார், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், காந்திராஜன், ஜவாஹிருல்லா, மணியன், அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாகும். பிரதானமாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை பொது ப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அன்பழகன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News