உள்ளூர் செய்திகள்

செல்லியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா

Published On 2022-08-12 14:36 IST   |   Update On 2022-08-12 14:36:00 IST
  • முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா நடந்தது.
  • கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் மையப்பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு 46 -ம் ஆண்டு பூச்சொறிதல் விழா தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று செல்லியம்மன் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கனக்கான பொதுமக்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு , தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News