உள்ளூர் செய்திகள்

அஸ்மாபாக் அன்வர்தீன்

மத்திய பட்ஜெட்: ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு

Published On 2023-02-02 06:40 GMT   |   Update On 2023-02-02 06:40 GMT
  • மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
  • ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.

நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.

மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News