உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

Published On 2023-02-28 14:15 IST   |   Update On 2023-02-28 14:26:00 IST
  • கீழக்கரையில் ரத்ததான முகாம் நடந்தது.
  • கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

கீழக்கரை

கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றுக் கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் ரத்தத்தை கொடையாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர்.

கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் கபீர், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் சாலிக் ஹுசைன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், ரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாவுல்ஹக், அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு கவுரவ ஆலோசகர் சேக் அப்துல் காதர், செயலர் தாஜுல் அமீன், தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் இப்த்திகர், கவுன்சிலர்கள் நசூருதீன், ஷேக் உசேன், மீரான் அலி, சமூக ஆர்வலர் அஜிகர், என்.டி.எப். மாநில நிர்வாகி முகமது பருஸ், மாவட்ட தலைவர் அப்துல் நசீர், வி.சி.க.தொகுதி செயலாளர் அற்புதகுமார், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அபுதாஹிர், மக்கள் டீம் காதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News