- தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
- ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.
கீழக்கரை
கீழக்கரையில் ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடந்தது.
கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சந்திப்பில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலின் அவசியத்தையும், நன்மையையும் மாணவிகள் கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ரோட்டரி சங்க தலைவர் கபீர் தலைமையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் முன்னிலையில் நடந்தது. இதில் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள், கருவுற்று ஆலோசனைகள் பெற வந்த பெண்கள் 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்வுகளில் அரசுமருத்துவமனை மருத்துவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.