உள்ளூர் செய்திகள்
அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டை கிராமத்தில் அரியநாச்சியம்மன், இருளப்பசுவாமி, கருப்பணசுவாமி, கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 2 கால யாக சாலை பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.