உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-14 11:24 IST   |   Update On 2023-08-14 11:24:00 IST
  • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் ஒன்றிய துணை செயலாளரும் வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மன் சுந்தர பாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனிய சாமி பேசுகையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். மாநாட்டிற்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் விளங் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கனக வள்ளி முத்துவேல், சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News