உள்ளூர் செய்திகள்

தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்த இளம்பெண்

Published On 2023-02-23 15:22 IST   |   Update On 2023-02-23 15:22:00 IST
  • ராமேசுவரம் அருகே இளம்பெண் ஒருவர் தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்தார்.
  • இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்த போது தனது தோழியின் பெயரில் வந்த ஐ.டி.யில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லாபம் பெற்றதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர், தனது தோழியிடம் கேட்டதற்கு அவரும் அந்த தகவல் உண்மைதான் என்று கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது தோழியைபோல் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடிவு செய்த விஷ்ணு பிரியா, தனது வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.2 லட்சம் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

பின்னர் அந்த தொகைக்கு லாபம் வந்துள்ளதா? என அந்த நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தோழியை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராமை பிளாக் செய்து விட்டது தெரியவந்தது.

இதனால் தோழி கூறியதை நம்பி பணத்தை இழந்து விட்டதை அறிந்த விஷ்ணு பிரியா, இதுபற்றி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News