உள்ளூர் செய்திகள்

புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதி

Published On 2023-07-27 06:51 GMT   |   Update On 2023-07-27 06:51 GMT
  • ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
  • இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.

கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.

இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.

சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News