உள்ளூர் செய்திகள்

சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தது

தொண்டியில் 68 மி.மீ. மழை பதிவு

Published On 2022-06-07 10:05 GMT   |   Update On 2022-06-07 10:05 GMT
  • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 68 மி.மீ. மழை பதிவானது.
  • தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. ஓட்டு வீடு, கூரை வீடுகளில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொண்டி சத்திரம் தெரு, வெள்ளை மணல் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு தலைமையில் சுகாதார மேஸ்திரி கோவிந்தராஜன் பேரூராட்சி பணியாளர்களுடன் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

Tags:    

Similar News