உள்ளூர் செய்திகள்

வீட்டில் கட்டி இருந்த 5 ஆடுகள் திருட்டு

Published On 2023-06-12 13:42 IST   |   Update On 2023-06-12 15:04:00 IST
  • ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் கட்டி இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டது.
  • திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

ஆர்.எஸ்.மங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்,மங்கலம் உப்பூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது60). இவரது வீட்டு தொழுவத்தில் கட்டி இருந்த 5 ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லத்துரை திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய வர்களை தேடி வருகிறார். திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News