உள்ளூர் செய்திகள்

படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம்

Published On 2023-09-28 11:49 IST   |   Update On 2023-09-28 11:49:00 IST
ஆலங்குடி பகுதிகளில் போதிய அளவு பேருந்து இயக்கப்படாததால்படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம்

ஆலங்குடி 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, மாங்கோட்டை, நெடுவாசல், உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதுமான பேருந்துகளை இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதனால் மாணவ மாணவிகள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் என்ற பதற்றத்துடனே மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News