உள்ளூர் செய்திகள்
தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேடி வரும் போலீசார்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டி யை சேர்ந்த தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி (வயது 22). பி.எட்., படித்து முடித்து வீட்டில் இருந்து வந்த இவர் திடீர் என மாயமானார். பல இடங்களில் உறவினர்கள் ேதடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆலங்குடி போலீசில், தந்ைத தேவனேசன்கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து கல்லூரி பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்.