உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் நாளை வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்-கே.கே. செல்வகுமார் தலைமையில் நடக்கிறது

Published On 2023-01-04 12:58 IST   |   Update On 2023-01-04 13:23:00 IST
  • புதுக்கோட்டையில் நாளை கே.கே. செல்வகுமார் தலைமையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்
  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் கலந்து கொள்கிறார்கள்

புதுக்கோட்டை:

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பன்நெடுங்கால வரலாற்றை திரிக்கும் வகையிலான புதுக்கோட்டை நகர் மன்றத்தின் தீர்மானத்தை கண்டித்தும், புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலையை நிறுவிட வலியுறுத்தியும், முத்தரையர் சமூகத்தை தவறாக பேசியதை கண்டித்து நாளை(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தமிழர் தேசம் கட்சியின் தலைவருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்குகிறார். இதில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News