விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடந்தது
- அம்பேத்கர் படம் சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள புதுவளசல் கிராமத்தில் அம்பேத்கர் படத்துடன் விடுதலை சிறுத்தை கட்சி பெயர் பலகையும் அம்பேத்கார் படத்துடன் கூடிய தனியார் கல்வி நிறுவனத்தின் பெயர் பலகையும் உள்ளது.
இந்நிலையில் அம்பேத்கர் படம் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பெ யர் பலகைகளையும் அவ்வப்போது மர்ம நபர்கள் கிழித்து சேதப்படு த்துவது தொடர் கதையாகி வரக்கூடிய நிலையில், கடந்த 27ம் தேதி இதுபோன்ற சம்பவத்தை கண்டித்து அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இது போன்ற சம்பவம் அரங்கேராது என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் புதுவளசல் கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயர் பலகையில் உள்ள அம்பேத்கர் படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள், கட்சி கொடியையும் அறுத்து சேதப் படுத்தி உள்ளனர், அதேபோல் அம்பேத்கர் படம் இடம் பெற்ற தனியார் கல்வி நிறுவன பெயர் பலகையை சாய்த்துள்ளனர்.
இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அம்பேத்கர் படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கோரி, புதுப்பட்டி-ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கறம்பக்குடி வட்டாட் சியர் ராமசாமி மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இனிமேல் இது போன்ற சம்பவம் தொடராமல் இருக்க தகுந்த நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.