உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2023-06-21 07:30 GMT   |   Update On 2023-06-21 07:30 GMT
  • கணவர் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை சரமாரி வெட்டினார்
  • மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

கீரனூர்,


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56).் இவரது மனைவி கலாராணி (42). இவர்களுக்கு மகேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். விசாயியான முருகேசன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற கட்டையன் (55)் மனைவி முத்துலட்சுமி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 4 ஆண்டுகளாக முருகேசன் வீட்டுக்கு வராமல் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கலாராணி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், முருகேசன் என்ற கட்டையன், முத்துலட்சுமி, இவரது மகன் வினோத் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டைகளால் கலாராணி வீட்டிற்குள் புகுந்து கலாராணி, அவரது மருமகள் அனுசியா (22) மற்றும் மகேந்திரன் தாத்தா தீர்த்தப்பன் (76) ஆகியோரை அரிவாள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அனுசியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த தாக்குதலில் கலாராணியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டு விழுந்தது.அனுசியா, தீத்தப்பன் ஆகியோரும் இதில் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து முருகேசன் மகன் மகேந்திரன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாயாழகு வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் முருகேசன் என்ற கட்டையன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் முத்துலட்சுமி மற்றும் வினோத் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News