உள்ளூர் செய்திகள்
- ஆலங்குடி அருகே பெண் மாயமானார்
- இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள குரும்பி வயலைச்சேர்ந்த சிவசாமி மகள் செந்தூரதேவி (வயது 19). இவர் புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெண்ணின் பெற்றோர் உறவினர்களிடம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் வடகாடு போலீசில் சிவசாமி மகன் செந்தூரபாண்டியன் கொடுத்த புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.